போஸ்ட் ஆபீஸில் எம்ஐஎஸ் அக்கவுண்ட் திறக்க வேண்டும் என்றால், அதற்கு முன்னதாக உங்கள் பெயரில் சேமிப்பு அக்கவுண்ட் இருக்க வேண்டும் இந்திய அஞ்சல் சேவை சார்பில் தேசிய மாதாந்திர சேமிப்பு வருவாய் திட்டம் (MIS) செயல்படுத்தப்பட்டு வருகிறது. தங்கள் முதலீடுகளை பாதுகாப்பாக மேற்கொள்ளவும், எந்த வித ரிஸ்க்கும் இல்லாமல் லாபம் அடையவும் நினைக்கின்ற இந்தியர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமைகிறது. ஆபத்துகள் நிறைந்த முதலீட்டுத் திட்டங்களில் சேருவதைக் காட்டிலும், பாதுகாப்பு கொண்ட அரசு திட்டத்தில் முதலீடு செய்வதையே மக்கள் விரும்புகின்றனர். அஞ்சல் நிலையத்தின் எம்ஐஎஸ் அக்கவுண்டில் முதலீடு செய்வதன் மூலமாக ஒருவர் மாதந்தோறும் ரூ.5,000 வரை பணப்பலன் பெற முடியும். டெபாசிட் செய்வதற்கான வரையறை : எம்ஐஎஸ் சேமிப்புத் திட்டத்தின் கீழ் நீங்கள் தனிநபர் அக்கவுண்ட் அல்லது ஜாயிண்ட் அக்கவுண்ட் திறந்து கொள்ளலாம். தனிநபர் அக்கவுண்ட் கீழ் நீங்கள் ரூ.4.5 லட்சம் வரையிலும் டெபாசிட் செய்யலாம். ஜாயிண்ட் அக்கவுண்ட் வாயிலாக ரூ.9 லட்சம் வரையிலும் நீங்கள் முதலீடு செய்ய முடியும். அதே சமயம், தனிநபர்கள் இருவர் ஜாயிண்ட் அக்கவ...